இலங்கையில் நீதித்துறைச் சுதந்திரம்

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka

Abstract

இலங்கையில் நீதித்துறைச் சுதந்திரம் தொடர்பான ஏற்பாடுகளையும் அவற்றின் காத்திரமான வகிபங்கினையும் ஆராய்வதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். இந்நோக்கினை அடையும் வகையில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீதிபதிகள் எந்தவித முறைகேடான ஆதிக்கத்திற்கும் உட்படாவண்ணம், தமது தீர்ப்பை வழங்கக் கூடியதாகவிருக்கும் ஒரு நிலைப்பாட்டை அல்லது சூழ்நிலையினை நீதித்துறைச் சுதந்திரம் எனலாம். ஏனைய துறைகளிலிருந்து நீதித்துறை விடுபட்டிருப்பது மாத்திரம் நீதித்துறைச் சுதந்திரத்திற்கான காத்திரமான, முழுமையான வழிமுறைகள் எனக் கூறிவிட முடியாது. நீதித்துறையினைச் சார்ந்தோரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்கள் என்ற தத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலப்பகுதிகளில், இலங்கையில் நீதித்துறைச் சுதந்திரம் பேணப்பட்டுள்ளமையினை அவதானிக்கலாம். 1972 ஆம் ஆண்டு யாப்பு நடைமுறையிலிருந்த காலத்தில் நீதித்துறைச் சுதந்திரத்தினைப் பாதிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன. தற்போது நடைமுறையிலுள்ள யாப்பில் நீதித்துறைச் சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. அதேவேளை நீதித்துறைச் சுதந்திரம் நடைமுறையில் முறையாகப் பேணப்படவில்லை என்ற வாதமும் வலுப்பெற்றுள்ளது.

Description

Keywords

Citation

Kalam: Research Journal of Faculty of Arts & Culture, 7: 106-116.

Endorsement

Review

Supplemented By

Referenced By