போதைப் பழக்கத்திற்குட்பட்டோருக்கு அதிலிருந்து விடுபடுவதற்கு உதவி செய்வதில் இஸ்லாமிய உளவளத்துணையின் பங்கு : 2019ஆம் ஆண்டு கல்முனை நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களை மையப்படுத்திய ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, 32360, Sri Lanka.
Abstract
சமூகங்களை கேள்விக் குறியாக்கக் கூடிய உளச் சமூகப்
பிரச்சினைகளுள் ஒன்றாக போதைப் பழக்கம் காணப்படுகின்றது. நேரடியாகவும்
மறைமுகமாகவும் உலகளவில் போதைப் பாவனையால் வருடா வருடம் 11.8 மக்கள்
இறக்கின்றனர். புகைத்தல் மற்றும் மது பாவனை போன்ற போதைப் பாவனையால் வருடா
வருடம் உலகளவில் 350இ000 மக்கள் போதையளவு அதிகரித்ததன் (ழுஎநசனழளநள) விளைவாக
இறக்கின்றனர். இப்பாவனையால் 50 வயதுக்குக் குறைந்தவர்களே அதிகம் இறப்பைத்
தழுவுகின்றனர் (சுவைஉhநை ரூ சுழளநசஇ 2019). மேலும்இ 2019 ஆம் ஆண்டு 89இ321 போதைப்
பொருட்களுடன் தொடர்பான குற்றச் செயல் கைதுகள் இடம் பெற்றுள்ளதாக தேசிய
அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் 2019ஆம் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது.
இவ்வாறு போதைப் பாவனையும் அதனால் உருவாகும் குற்றச் செயல்களும் பரவலாக
அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனைத் தடுக்கும் முயற்சியில் ஒரு பக்கம் அரசாங்கம்
ஈடுபட்டாலும் மறுபுறம் ஏற்றுமதிஇ இறக்குமதி என்ற அடிப்படையில் பொருளாதார
அபிவிருத்திக்கு உதவும் சக்தியாகவும் இது மாறியுள்ளது.
போதைப் பொருள் பாவனை என்பது தனிநபர் பிரச்சினையாக ஆரம்பித்து அதன் விளைவுகள்
குடும்பப் பிரச்சினைஇ சமூகப் பிரச்சினை என விரிவடைந்து உளச்சமூகப் பிரச்சினையாக
உருவெடுக்கின்றது. இப்பாவனையால் ஏற்படக் கூடிய உளப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தக்
கூடிய அல்லது குறைப்பதற்கு உதவி செய்யக் கூடிய ஒரு துறையாக
உளவளத்துணையினைக் குறிப்பிடலாம். பொதுவாக உளவளத்துணை என்பது இன்று
மேற்குமயப்படுத்தப்பட்டிருப்பதால் அதனை முஸ்லிம்களுக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தும்
போது பல நம்பிக்கை சார் இடர்பாடுகள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த
அடிப்படையில் தான் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் உளவளத்துணை என்பது இஸ்லாத்தின்
நம்பிக்கைப் பெறுமானங்கள்இ வரையறைகள்இ கலாசார நடைமுறைகள்இ விழுமியங்கள்
போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் அமைய வேண்டும் என வாதங்கள்
எழுந்த வண்ணம் உள்ளன. இன்றைய உளவளத்துணையாளர்களுள் அநேகமானவர்கள்
மேற்குலக ஐரோப்பியஇ அமேரிக்க சிந்தனைகளால் தாக்கமுற்றவர்களாக காணப்படுவதனால்
தங்களிடம் வரக் கூடிய போதைப் பழக்கத்திற்கு உட்பட்ட சேவைநாடிகள் விடயத்தில் மிகச்
சரியான முறையில் தலையீட்டை செலுத்தத் தவறுகின்றனர். வெறுமனே மேற்கின்
உளவளத்துணை முறைமைஇ நுட்பங்களைப் பயன்படுத்தி இவர்களுக்கு உளவளத்துணை வழங்கும் போது குறித்த முஸ்லிம் சேவைநாடி தான் அல்லாஹ் தடுத்த பெரும் பாவம்
ஒன்றைச் செய்த குற்ற உணர்வுடன் வந்திருப்பதை பற்றி சிந்திக்காது உதவி
வழங்குகின்றனர். அதனால் சேவைநாடிகளின் உடலியல் தாக்கங்களுக்கு சரியாக
சிகிச்சையளிக்க முடிந்தாலும் உளவியல் மற்றும் ஆத்மீக ரீதியில் அவர்களுக்கு
பலன்குறைவாகவே உள்ளது. இன்னும் அந்தக் குற்ற உணர்வும்இ மீண்டும் போதைப்
பழக்கத்திற்கு ஆளாகமாட்டார் என்ற உத்தரவாதமின்மையும் தொடர்ந்து பயணிக்கின்றது.
இந்த பின்னணியில் தான் குறிப்பாக இஸ்லாமிய உளவளத்துணை தேர்ந்தெடுக்கப்பட்டு
போதைப் பழக்கத்திற்குட்பட்டோருக்கு உதவி செய்வதில் அதன் பங்கு எவ்வாறுள்ளது என
நடைமுறையில் பிரயோகித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு 2019ஆம் ஆண்டு கல்முனை
நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களில் முஸ்லிம்கள் தெரிவு
செய்யப்பட்டு அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான உளவளத்துணை வழங்கப்பட்டு
பெறுபேறுகள் பெறப்பட்டன. போதைப்பழக்கத்திற்கு உட்பட்ட முஸ்லிம் சேவைநாடிகளுக்கு
உதவுவதில் இஸ்லாமிய உளவளத்துணையின் வகிபங்கு என்ன? என்ற கேள்விக்கு
விடைகாண்பதற்காக இவ் ஆய்வு நோக்கமாக போதைப்பழக்கத்திற்கு உட்பட்ட முஸ்லிம்
சேவைநாடிகளுக்கு உதவுவதில் இஸ்லாமிய உளவளத்துணையின் வகிபங்கினை
கண்டறிவதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பண்பு ரீதியான
ஆய்வாகும். இதில்; முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
Description
Keywords
Citation
8th International Symposium 2021 on “Promoting Faith-Based Social Cohesion through Islamic and Arabic Studies”. 4th August 2021. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 146-153.